படம் துள்ளாத மனமும் துள்ளும் |
|---|
| இயக்கம் | எழில் |
|---|
தயாரிப்பு ஆர்.பி.செளத்ரி
இசை எஸ். ஏ. இராஜ்குமார்
நடிப்பு விஜய்,
சிம்ரன்,
மணிவண்ணன்,
ஒளிப்பதிவு ஆர். செல்வா
படத்தொகுப்பு வி.ஜெய்சங்கர்
விநியோகம் சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு ஜனவரி 29, 1999
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்,
பெ: மன்னவா ஒரு கோவில் போல்
இந்த மாளிகை எதற்காக,
ஆ: தேவியே என் ஜீவனே இந்த
ஆலயம் உனக்காக,
பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்,
ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்,
பெ: சாத்தியமாகுமா
ஆ: நான் சத்தியம் செய்யவா..
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்....
பெ: இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்,
ஆ: நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்,
பெ: நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்,
ஆ: உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்,
பெ: ஏ ராஜா இது மெய்தானா,
ஆ: ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை,
பெ: நான் நம்புகிறேன் உன்னை,
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்....
பெ: நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க,
ஆ: அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க,
பெ: இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு,
ஆ: காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு,
பெ: பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஆ: ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
பெ: உன் அன்பு அது போதும்,
பெ: தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்,
ஆ: விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்,
பெ: மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக,
ஆ: தேவியே என் ஜீவனே இந்த
ஆலயம் உனக்காக,
பெ: வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்,
ஆ: கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்,
பெ: சாத்தியமாகுமா
ஆ: நான் சத்தியம் செய்யவா......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக