பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
பெண் : ………………………
பெண் : நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
ஆண் : நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்
பெண் : நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
ஆண் : நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்
பெண் : நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண் : ………………………
ஆண் : நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்
பெண் : நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்
ஆண் : நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்
பெண் : நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்
ஆண் : நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்
பெண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
பெண் : நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்
ஆண் : நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக