பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
குழு : தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா
தந்தானே தந்தானே தந்தா
ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா
ஆண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் வாசமெல்லாம்
என்னோடு பேசவா
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும்
ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே
ஆண் : முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா
ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு
ஆண் : ஓ தென்றலே ஹோ தென்றலே
ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்
ஹா கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்
ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்
நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை
உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
எடுத்துசொல்லு
பெண் : ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்
உன்னோடு பேசவா
பெண் : ஓ தென்றலே ஹோ தென்றலே
ஹோ தென்றலே
ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்ம்….ம்ம்ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக